யாழ்.மாநகர நகரபிதா சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை முதல்வரிடமும் பி. சி. ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

20ஆம் திகதி மாலையில் மணிவண்ணனுக்கு யாழ்ப்பாணம் US Hotel இல் யாழ் மாவட்டச் சட்டத்தரணிகளால் விருநது உபசாரம் கொடுக்கவும் பட்டிருந்தது.இதற்கு யாழ் மாவட்டத்திலிருந்து 80 வரையான சட்டத்தரணிகள் சென்றிருந்தனர்.

இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் முகமூடி அணியவில்லை என்பதை படங்களில் இருநது உறுதிப்படுத்தமுடிகிறது!

உதயகுமார் அபிமன்யசிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *