சீனாவின் பிரபல பாடகர், நடிகர் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

சீன – கனடிய இசைக்கலைஞரும், நடிகருமான கிரிஸ் வூ கைது செய்யப்பட்டதாகச் சீனா தெரிவிக்கிறது. அவர் பல பெண்களையும் ஏமாற்றித் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகச் சீனப் பொலீஸ் அறிவிக்கிறது.

பிரபலமான கொரிய – சீன இசைக்குழுவான Exo மூலம் ஆரம்பத்தில் அறிமுகமானவர் வூ. சுமார் ஆறு வருடங்களாகத் தனியாக அவர் பிரபலமாகிச் சீனாவின் மிகவும் பிரபலமான ஒரு கலாச்சார நட்சத்திரமாக இருப்பவர். கனடாவின் குடியுரிமையும் கொண்டவர் வூ.

டு மெய்சு என்ற 19 வயதுப் பெண் சமூகவலைத்தளங்கள் மூலமாக, தான் மதுபோதையில் இருக்கும்போது வூ தன்னை வன்புணர்வு செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். அதன் பின்னர் நடந்தவை பற்றிய இணையத்தள நேர்காணல்களிலும் அவர் பங்குபற்றினார். டு மெய்சு சொல்வது பொய்யென்று மறுக்கும் வூ அவர் மீது அவதூறு செய்யதற்காக வழக்குப் பதிவுசெய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

வன்புணர்வுக் குற்றஞ்சாட்டப்பட்ட விபரங்கள் வெளியானதும் வூவுடன் சேர்ந்து தமது ஆடம்பரப் பொருட்களுக்காக விளம்பரம் செய்யும் பத்து நிறுவனங்கள் அவருடனான தமது ஒப்பந்தங்களிலிருந்து விலகிவிட்டன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *