கவலைக்கு கட்டில் போடும் மனிதனா நீ

சிறு உளி கூட மலை பிளக்கும்
ஓர் தீக்குச்சி கூட காடழிக்கும்
முடங்கி கிடந்தால் உயிர் வெறுக்கும்
எழுந்து பறந்து பார்
உலகே உனை அழைக்கும்

கண்ணீரில் தொட்டில் கட்டாதே
கவலைக்கு கட்டில் போடாதே
அழவா பெற்றால் என் தாய் என்று
எழுவாய் தோழா இக் கணம் வென்று

முடியாது என்று ஒன்றுமில்லை
முதல் படி ஏறு தெரியும் எல்லை
முடங்குதல் தான் பெரிய தொல்லை
எகிறி அடி பூக்கும் உன்னருகே ஒரு கோடி முல்லை🍂

எழுதுவது : சுப பாலா