வெற்றி வந்து விருந்து தர தோல்வியிலிருந்து போராடு 💪💪

🔥சோர்ந்து போனால் துயரம் தோளேறும்
வீழ்ந்து போனால் துன்பம் கொடியேற்றும்
ஓய்ந்து போனால் உலகம் பழி கூறும்
ஓயாத அலையாய் எழு– அனைத்தும் ஓர் நாள்
நிறைவேறும்🔥

🔥தோல்வி என்பது உன்னை சுடாத வரை
வெற்றி வந்து விருந்து வைக்காது
தோல்வியில் பாடம் கற்காவிடின்
வேள்விகள் செய்ய மனம் துணியாது
கேள்விகள் ஆயிரம் உன்னுள் எழாதவரை
தோல்வியை வெல்ல துணிவிருக்காது
வருவதை ஏற்று வருத்தத்தை எதிர்த்தால்
வரலாறு என்றுமே உனை மறக்காது🔥

🔥உளிகளில் பட்ட கற்களே சிற்பங்களாகிறது
வலிகளில் பட்ட அனுபவமே வாழ்க்கையை
அழகாய் தருகிறது
விதைகளின் வீரிய உந்துதலே நிலத்தை பிளந்து எழுகிறது
வீறு கொண்டு எழுந்து நடந்து பார்
உனக்குள்ளேயே வீரியம் இருக்கிறது🔥

🔥பிறப்பின் ரகசியம் உனக்குள்ளும் உண்டு
இறப்பின் முன்னே தொட்டு விடு
விருப்பு வெறுப்பை கடந்து சென்று
வியக்கும் படி வாழ்ந்து விடு
நெருப்பைப் போல நிமிர்ந்து நின்று
உன் இருப்பை புகழாய் ஏற்றி விடு🔥

🔥மரணம் வரை தான் வாழ்க்கை என்பதை
மனதுக்குள் சொல்லியெழு
மனதை வருத்தும் அனைத்தையுமே
துணிவால் சுயத்தால் வென்று விடு
கருணை நிறைந்த உலகத்தில்– இறைவன் அருளை நம்பி தொழு
காலம் உனை கட்டி அடித்தாலும்
கடவுள் உளான் வீண் கவலை விடு🔥

எழுதுவது – சுப பாலா