பாரதி அந்தாதி வெண்பா மாலை

எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்இருதயத்தில் பொங்கும் இரக்கம் – உருகவரும்ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து.

வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வாநெஞ்சே! வல்லறிஞர்தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் – ஆழ்த்திஅறங்கொல்லும் காலன் அரண்டோடச் செய்யும்திறங்கொண்ட செல்வன் சிறப்பு.

சிறப்பன்றோ பாரதியின் செந்தமிழ்ப்பாட் டோசை,சிறப்பன்றோ பாட்டின் தெளிவு, – சிறப்பன்றோசீர்கொண்ட பாட்டால் செவிமகிழச் செய்தவனின்பார்போற்றும் தேசப் பணி.

பணிந்து நெடுந்துயரில் பாடுபட வேண்டாம்துணிந்திங்கு உயர்த்திடுவோம் தோளை – இணைந்துசெயல்பட்டால் வாழ்வுஉயரும் என்றான் தெறிக்கும்புயல்வேகப் பாடல் பொழிந்து.

பொழிந்தான் இசைப்பாடல் புத்தெழுச்சி ஊட்டமொழிந்தான் மனம்கிளரும் உண்மை – செழுந்தேன்திரண்டெழுந்த சொல்லால் தெளிவுறவே தந்தான்இருண்டிருந்த நெஞ்சுக்கு இதம்.

இதம்துயர் என்றே எதுவரினும் வாழ்வில்நிதம்களித்து இன்புற்று நிற்போம் – மதங்களும்சாதிகளும் செய்யும் சதியறுப்போம் என்றுரைத்தான்போதனையே வாழ்வின் பொருள்.

பொருள்விளக்கும் ஞானம் புரியும்வகைப் பாடிஇருள்விலக நல்விளக்கை ஏற்றி – அருள்நிறைந்தஆன்மநிலை காட்டி அறமுணர்த்தும் பாரதியின்வான்புகழைப் போற்றிடுமென் வாய்.

வாயில் இனிக்க வருந்தமிழ் வார்த்தைகளால்பாயும் ஒளிபடைத்த பாரதியின் – தூயகவிகட்டுஅதனை வெட்டிச் சிறுமைக் களைசாய்த்துச்சுட்டெரிக்கும் தீயின் சுடர்.

சுடர்கொள் தமிழ்க்கவிஞன் சொற்கேட்டு நெஞ்சேமடமை வலைமீண்டு வாழ்வாய் – அடிமைச்சுமைகள் தவிர்த்துஉயரம் தொட்டிடவே ஞானஇமயச் சிகரத்தை எட்டு.

எட்டிப் பிடிக்க இவன்வசம் வான்வருமேதொட்ட எழுத்தும் சுடர்க்கவியாம் – மெட்டில்பிரியா இவன்பாட்டும் பேரிடர்செய் பொய்யைஇரையாக்கித் தின்னும் எரி.

எழுதுவது ; கரவையூர் தயா