நண்பனின் குரல்

உன் குரலை கேட்டு மகிழ்ந்ததை விட அதை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்!


உன் குரலைக் கேட்காமல் இருக்கையில் எனக்கு புரிந்தது
உன் குரலைப் பற்றிய எண்ணமும் என்னை மகிழ வைக்கும் என்று!


உண்மையான நேசம் இருந்தால்…
அருகில் இருக்கத் தேவையில்லை, தொலைவில் இருந்தாலும் பேசும்!


நல்ல நண்பனை அடைந்து விட்டேன் என்று உணர்கிறேன் பரவசமாய்!


இது என் நினைவுகள் நண்பனே உனக்கும் என் நிலை தானோ!

எழுதுவது : விஜயலட்சுமி