அகவழகே வெல்லும்

மனமே மயங்காதே
மதியாதாரை நினைக்காதே…

மதியினை மறக்காதே
மானத்தை துறக்காதே…

பட்டமும் பணமும்
பாதையில் நிலைக்காதே…

பந்தமும் பாசமும்
பாடையில் தொடராதே…

அகம் தான் அவசியம்
அழகினை நாடாதே…

அன்பை உணராது
அகம்பாவத்தில் ஆடாதே…

குணமே பிரதானம்
குறையினை தேடாதே…

குத்திக்காட்ட முனைந்து
குடும்பத்தை இழக்காதே ..

நன்றாய் உழைத்தாலும்
நடப்பது தரையிலே…

நாயகன் என்றாலும்
நாலு பேர் தேவையே…

புரிந்து கொண்டு நடந்திடு
பிரிந்து நான் போகிறேன்…

புனிதமாய் நீ வாழ்ந்திட
புண்ணியவானை வேண்டுறேன்…

எழுதுவது : S.சிவா