இளைஞனே வீறு கொள்

வீரத்தின் விளைநிலத்தில் உதித்த இளைஞனே!

விளைநிலம் வீட்டுநிலமாய் மாறும் நிலை கண்டு வீறு கொள்!

சமதர்ம சமுதாயம் நிலை பெறும் என்ற உன்கனவை சிதைக்கும் சீர்கெட்ட மானுடத்தை கண்டு வீறு கொள்!

பட்டங்களையும், சட்டங்களையும் பணமாக்கும் பாரின் நிலையை மாற்ற வீறு கொள்!

அரசியலை அசிங்கமாக்கும் அவலநிலையை மாற்ற வீறு கொள்!

மனிதனை மாற்றும் மாற்றத்தை மாற்ற நல்ல மானிடனாய் இளைஞனே வீறு கொள்!

எழுதுவது: முனைவர் ந.மணிமேகலை, ந.கந்தம்பாளையம்