வள்ளுவம் ஏற்றிடு

சுழன்றிடும் உலகினில் சுகமாய் வாழ்ந்திடு
சுற்றமும் நட்புமே சூழ்ந்திட நிலைத்திடு
பழகிடும் பண்பினால்
பக்குவம் அடைந்திடு
பாசத்தில் நேசத்தில் பகைமை வென்றிடு

அழகிய அன்பினால்
அகிலத்தை அணைத்திடு
ஆறுதல் பெற்றிட அமைதியை நாடிடு
விழுமிய ஒழுக்கம்
விரும்பி ஓம்பிடு
வள்ளுவன் குறளை
வாழ்வாய் ஏற்றிடு

வழுவிலா குணத்தால்
வல்லமை கொண்டிடு
வஞ்சகர் விலக்கிட
விவேகம் காட்டிடு
வலுவான கடமையை
வரமாய் ஆற்றிடு
வற்றாத கருணை
வளமாக கடைபிடி

நலமாக வாழ்ந்திட
நல்லதை நினைத்திடு
நன்மை புரிந்தே
நற்பெயர் எடுத்திடு
நாளைய சந்ததி
நலம்பெற உழைத்திடு
நற்றமிழ் என்றும்
நிலைபெற உயர்த்திடு

ஆக்கம்

உத்திராபதி இராமன் ஈப்போ, மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *