ஆனந்தம்

பனி மழையில்
விளையாடுவது ஆனந்தம்!

மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்!

மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்!

அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்!

பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!

குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடுவது ஆனந்தம்!

ஒற்றை ரோஜா மலரை தலையில் சூடுவது ஆனந்தம்!

அன்னையின் கரங்களால்
ஊட்டிக் கொள்வது ஆனந்தம்!

அன்பான குரலைக் கேட்பதில் ஆனந்தம்!

மனதுக்கு பிடித்த மணாளன் அமைவது ஆனந்தம்!

புத்தம் புதிய உடை உடுத்துவது ஆனந்தம்!

சின்ன சின்ன
ஆனந்தத்தை அனுபவித்து
வாழ்வோம்!

எழுதுவது: விஜயலட்சுமி