தமிழ் தாயின் பெருமை

தமிழுக்கு
அமுது என்றனர்
அதனால்தான்

ஆதிமனிதன் முதல்
கலியுகம் வரை
தமிழனால்தான்
தலைநிமிருகிறது -இத்
தரணி…

இந்த உலக
அறிவியலும் சரி
ஆன்மிகமும் சரி
தமிழன்
தடம்பதிக்காத
துறையே கிடையாது

கூகுளின்
குரலையும் சரி
டெஸ்லாவின்
தானியங்கியும் சரி
தமிழமுது உண்டவனின்
கைவண்ணமே..

உலகமொழி
அனைத்தையும்
ஒன்று கூட்டி
“ழ”கரத்தின்
எழுத்தினை எழுதசொன்னால்
விழிபிதுங்கும்…

வாழ்வியலின்
தத்துவத்தை
ஐயன் திரு வள்ளுவர்
இரண்டு வரிகளாய்
அச்சிட்டான் மானுட
வாழ்க்கையை..

நாலடியும்
இரண்டடியும்
கற்றவனிடம்
வாயடியும்
சொல்லடியும்
செல்லாது என்பர்…

ஆத்திச்சுவடி
சொல்லாத
அற்புதங்களே
அகிலத்திலும்
இல்லையே…

பாமரனையும்
கவிவடிக்க
காரணகர்த்தா
பாரதியின் கவியில்
எழுதாத வீரமும்
விவேகமும் எதிலும்
இல்லை என்பர்…

தமிழ்த்தாயின்
பெருமை கூற இத்
தங்கமகளுக்கு
நேரம்போதாது…

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்

எழுதுவது:எஞ்சலா சவரமுத்து,ஈப்போ,மலேசியா.