புத்தகம்

எல்லோராலும் வெறுக்கப்பட்டு
ஒரு சிலரால் மட்டுமே
விரும்பப்படுகின்ற உன்னை
நானும் விரும்புகிறேன்!

இன்று நேற்றல்ல- உன்னை
என் தாய் கையில் ஒப்படைத்த
நாள் முதலே!

என் வாழ்நாளின் இறுதிவரை
என்னுடைய பயணம்
உன்னுடன் தொடரவேண்டும்
வாழ்நாள் முழுவதும் !

உன்னுடைய கரம்
எந்த ஒரு சூழ்நிலையிலும்
என்னை விட்டுப் போகக்கூடாது
போகவும் விடமாட்டேன் !

எத்தனையோ தடைகள் வந்தபோதிலும்
உன்னை ஒருபோதும் நான் விடவில்லை!
தடைகளைத் தகர்த்தெறிந்து – என்னுள்
உன்னை சுவாசிக்கிறேன்!

என் குடும்ப உறுப்பினர் போல்
என்னுள் நீ தொடர வேண்டும்!

என் நேசக்கரம் பிடித்து
நான் உன்னை அழைத்துச் செல்ல வேண்டும்!
வருவாயா!!

எழுதுவது : திருமதி க .பாலா உதவி பேராசிரியர் கணிதத் துறை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மண்மங்கலம் ,கரூர்.