சமத்துவமே நமது சக்தி
அனைத்தும்,அனைவருக்கும் சமம் என்பதே சமத்துவம்,
நேர்மையே அதில் தனித்துவம்…
உயிர்களிடத்தே ஒற்றுமை வேண்டும்,
அப்போதே சமத்துவம் நிலவும்…
ஆணும், பெண்ணும் ஒருவற்கு ஒருவர் சமம்,
என்பதே சரியான வாழ்வு…
எதிலும் பாகுபாடு இருத்தல் கூடாது,
பண்பாடே இருத்தல் அவசியம்…
ஏற்றம், தாழ்வு இருத்தல் கூடாது,
புதிய மாற்றம் மட்டுமே இருத்தல் வேண்டும்…..
சமத்துவமே நாட்டையும், வீட்டையும் காக்கும் சரியான சக்தி….
யாரும், யாருக்கும் குறைந்தவர் இல்லை என்பதே, சமத்துவத்தின் தத்துவம்…..
சமத்துவம் இருப்பின், காலம் கருதாமல் ஞாலத்தினும் பெரிதாக உயரலாம்….
சமத்துவ வாழ்வே, சரியான பாதை..
சம வாழ்வே,சாந்தி தரும்…..
சம வாழ்வே, சரித்திரம் படைக்கும்…..
எழுதுவது :கவிஞர் த.திவ்யலட்சுமி
திருப்பத்தூர்