இம்மாத நடுப்பகுதியில் ஐக்கிய ராச்சியத்தைக் கடுமையான வெப்ப அலை தாக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.
ஏற்கனவே வழக்கத்துக்கு மாறாக அதிக வெம்மையை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொண்டிருக்க ஐக்கிய ராச்சியம் அதே சமயத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றிருந்தது. இதே நிலைமை தொடர்ந்து வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகமாகும் என்று நாட்டின் வானிலை அவதானிப்பு மையம் குறிப்பிட்டிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் சமீப வாரங்களில் பெற்றிருக்கும் மழைவீழ்ச்சி இதே காலத்தில் பெய்யும் மழைவீழ்ச்சியில் மூன்றிலொரு பங்கு மட்டுமே. முக்கியமாக நாட்டின் தென்பாகத்தில் சராசரியைவிட 36 விகித மழைவீழ்ச்சியே விழுந்திருக்கிறது.
நாடெங்கும் வெப்பநிலை 20 பாகை செல்ஸியஸுக்கு அதிகமாகும் என்றும் தெற்குப் பகுதியில் மிக அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்