ஏக்கம்

ஏக்கம்

பள்ளிப் படிப்பை முடித்ததும் குழப்பம்!
அடுத்து என்ன செய்வது என்று!
கல்லூரி சென்று பயில ஆசை!
ஆனால் பெற்றோர் சம்மதம் இல்லை!
தோழி மூலம் செய்தி கிடைத்தது!
சிறப்பு குழந்தைகள் பள்ளியில் வேலை!
செய்தி அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம்!
அதற்கென தனி படிப்பு உண்டு!
சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு படிப்பை முடித்தேன்!
சிறப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்!
காது கேளாத குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தேன்!
அவர்களின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்!
என்னை அவர்களுக்கு மிகவும் பிடித்தது!
என் குழந்தைகளாகவே அவர்களை நினைத்தேன்!
திருமணம் நிச்சயம் ஆனது!
குழந்தைகள் பிரிவால் மிகவும் வருந்தினேன்!
மீண்டும் அக்குழந்தைக்கு பணியாற்ற இயலுமா!
அனுதினமும் ஏங்குகிறேன் கடவுளிடம் வேண்டுகிறேன்!!

எழுதுவது
ந.ராஜேஸ்வரி
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி
கரூர் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *