முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் பிணையில் விடுவிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் யில் அஜித் நிவாட் கப்ரால் சரீரப்பிணையில் பிணை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குறித்த மனு தாக்கல் மனுதாரரால் தொடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமல்லாமல் குறித்த இந்த வழக்கை திருத்தப்பட்ட முறைப்பாட்டினூடு தாக்கல் செய்வதற்கும் தினியாவல பாலித தேரருக்கு கோட்டை நீதாவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் , அமைச்சரவை அனுமதியின்றி இவ்வாறு பாரிய தொகை செலுத்தப்பட்டுள்ளமை நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகவும் பாரதூரமான குற்றம் என மனுதாரர் தினியாவல பாலித தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *