“இந்துக்களின் போர்” யாழ் இந்து திடல் மைதானத்தில்

“இந்துக்களின் போர்” எனக் குறிப்பிடப்படும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்குமான துடுப்பெடுத்தாட்டப் போட்டி இன்று ஜூன் 10ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தவருடம் யாழ் இந்துக்கல்லூரியில், மீள் புனரமைக்கப்பட்டு பிரமாண்டமாக திறந்துவைக்கப்பட்ட திடல் மைதானத்தில் இந்த துடுப்பெடுத்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.

காலை 8 மணியளவில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் அதே வேளை தொடர் இருநாள் போட்டியாக இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த 2 வருடங்கள் கோவிட் பெருந்தொற்று நோய்ப்பரவல் காரணமாக போட்டிகள் தடைப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் மிக எதிர்பார்ப்போடு துடுப்பெடுத்தாட்டச்சமர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மைதானத்தில் யாழ் இந்து வெற்றிவாகை சூடுமா அல்லது மீண்டும் ஒருதடவை வெற்றிபெற்று ஐந்தாவது வெற்றியை கொழும்பு இந்து பதிவு செய்யுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு இந்த போட்டி மீது குவிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *