கெத்துசெத்து|கவிநடை

அழகு
ஓர் நாள்
குலைந்து
போகும்..

அறிவும்
ஓர் நாள்
மழுங்கிப்
போகும்..

திறமை
ஓர் நாள்
தீர்ந்து
போகும்..

இளமை
ஓர் நாள்
முதுமை
காணும்..

செல்வம்
ஒர் நாள்
வற்றிப்
போகும்..

செருக்கும்
ஓர் நாள்

செருப்பு
போலவே
தேய்ந்து
போகும்..

ஆம்..

பிறவிப்
பயன்
தீர்ந்து

பிறப்பும்
ஓர் நாள்
மாய்ந்து
போகும்..

ஆனால்..

பிறர்
போற்ற

நீ
வாழ்ந்த

வாழ்க்கை
மட்டுமே

நினைவுகளில்
நீண்டு
வாழும்….

நீல
வானமாய்.
நிலைத்து
ஆளும்..

பூச்சி
புழுவுக்கும்

பறவை
விலங்குக்கும்

பதிவுகள்
இல்லை.

மனிதனுக்கு
மட்டுமே

பிறப்பு
முதல்
இறப்பு வரை

சான்றிதழ்
உண்டு

சரித்திரம்
உண்டு..

செய்து
சேர்த்த
சிறப்புக்கு

சிலைகளும்
உண்டு..

சிதையில்
எரிந்து

சாம்பலாகி
போனாலும்

கூகுளும்
உன்னை

குறித்து
வைக்கும்

விக்கிப்பீடியா
உன் விபரம்
சொல்லும்..

விருதுகள்
பலவும்

உனது
விலாசம்
தேடும்..

ஆக…

மூடப்பட்ட
மண்ணுக்குள்
நீ என்றாலும

தேடப்படும்
தெய்வமாகவே

நீயும்
இருப்பாய்..

மகிழ்வித்து
மகிழ்…

அம்புட்டு
தான்….

எழுதுவது : மருது அழகுராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *