மனநோயாளிகளே மாறுங்கள்….!

சீரற்ற சிந்தனை சீற்றம் கொண்டு
மீண்டும் மீண்டும் உதித்திடும் தருணம்
அழுத்தத்தின் நிலைப்பாடு ஆக்ரோஷத்தின் வெளிப்பாடு
உன்னையே உலகிற்கு காட்டிடும் மனநோயாளியாய்

இயலாமை நிலையதுவும் நில்லாது ஓடிடும்
முயற்சியுடன் கூடிய முன்னெடுப்புச் செயலினால்
நேர்மறை சிந்தனை நெஞ்சுறுதி கொண்டாலே
மனநோயுனைத் தாக்காமல் வாழ்ந்திடுவாய் பூமிதனிலே

ஆறாம்அறிவு அமையப்பெற்ற புனிதப் பிறப்பே
ஆழ்ந்து யோசித்து முடிவெடுத்தால் சிறப்பே
தீர்க்கதிண்ணம் கொண்டு மதியை நம்பு
முடிவொன்று தவறானலும் விரும்பியே ஏந்து

சினத்தைத் தொடர சித்தம் கலங்கும்
ஐயம் வளர ஆற்றல் குறையும்
அமைதியெனும் கடலில் தொலைத்ததை தேடு
அறிவெனும் முத்தும் அழகாய்க் கிட்டும்

உன்னை நீ நம்பு தூயசிந்தனை கொண்டு
தீயெண்ணம் தீஞ்சொற்கள் முற்றிலும் நீக்கு
அகத்தை தூர்வார ஆத்ம சக்தி பெருகும் மனநோய் உனை விட்டு சொல்லாமல் ஓடும்..

எழுதுவது: காயத்ரிசுந்தர், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *