இத்தாலியர்களை மீண்டும் வாக்களிக்க வைக்க முடிவெடுத்தனர் மூன்று கட்சியினர்.

நாட்டின் பாராளுமன்றத்தில் எதிரும் புதிருமான கட்சிகளின் ஆதரவுடன் பதவியிலிருந்து வந்த இத்தாலியப் பிரதமர் மாரியோ டிராகி ஜூலை 14 ம் திகதியே தான் முன்வைத்த திட்டம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறாததால் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்திருந்தார். அதை ஜனாதிபதி சர்ஜியோ மத்தரல்லா ஏற்கவில்லை. புதனன்று டிராகி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்காமல் மூன்று ஆதரவுக் கட்சிகள் ஒதுங்கிக்கொண்டாலும் அவர் வியாழனன்று மீண்டும் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.  

இத்தாலியர்கள் பலர் இணையத் தளங்களில் தமது ஆதரவை டிராகிக்குக் கொடுத்து அவரைப் பிரதமராகத் தொடரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஆதரவளித்துவந்த கட்சிகள் மூன்றில் இரண்டு மூன்றாவது கட்சியுடன் சேர்ந்து ஆட்சியிருக்க மாட்டோம் என்று அடம் பிடிப்பதாலேயே டிராகி தனது பதவியை உதற முடிவெடுத்திருக்கிறார். நாடெங்கும் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் டிராகியைத் தொடரும்படி வேண்டி ஊர்வலங்களை நடாத்தவிருக்கிறார்கள்.

“பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை உதறித்தள்ள முடியவில்லை,” என்று டிராகி நெகிழ்ந்து போய்க் கூறினாலும் நாட்டின் பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைமையால் வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் இத்தாலியர்கள் மீண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்லவேண்டியிருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *