இங்கிலாந்தின் உலகக்கிண்ண கனவு தகர்ந்தது..
நடப்புச் சம்பியன்கள் பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது….

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இன்றைய இறுதிக் காலிறுதிப்போட்டியில், நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இன்றைய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தாமே நடப்புச் சம்பியன்கள் என்ற பலத்தை நிரூபித்தது பிரான்ஸ் அணி.

இங்கிலாந்து அணிக்கு கிடைத்த இரண்டாவது பனால்டி வாய்ப்பை இங்கிலாந்தின் தலைவர் ஹரி கேன் தவற விட பிரான்ஸின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது.

நடப்புச் சம்பியன்களாக அரையிறுதிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக 1962 ம் ஆண்டு பிரேசிலுக்குப்பின் பிரான்ஸ் அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *