தன்னிடம் தந்தையார் வாங்கிய கடனைத் திருப்பி வாங்கித்தரும்படி பொலீசாரிடம் உதவி கோரிய பையன்.

9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300 ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்ட தகப்பன் அதைத் திருப்பித் தரவில்லை எனவும் அதற்காகப் பொலீசார் உதவவேண்டும் என்றும் அவன் கேட்டுக்கொண்டான்.

நெடும்கண்டம் பொலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பையன், “எனது அப்பா ஒரு நல்ல மனிதர், அவரைப் பொலீஸ் நிலையத்துக்கெல்லாம் இழுக்கவேண்டாம். எப்படியாவது பணத்தை வாங்கிக் கொடுத்தால் போதும். நான் விஜய் சினிமா பார்க்க பணம் தேவையாயிருக்கிறது,” என்று கேட்டுக்கொண்டான்.

எப்படியாவது தாம் பையனின் பணத்தை மீட்டுத் தருவதாகச் சொல்லி அவனை வீட்டுக்கனுப்பிவைத்தனர் பொலீசார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *