இரும்பு திருடியவர்கள் கைது

சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்து திருடியதாக குற்றசாட்டில் 20பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் .இதில் 8 பெண்களும் உள்ளடங்குவர்.

திருட்டு சம்பவம் நடந்துக்கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் திருட்டில் ஈடுப்பட்டிருந்தவர்களை கைது செய்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 120மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதிவாய்ந்த இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாக சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத்தர்மபிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *