‘ஹெரோயினை’ உட்கொண்ட நபர் உயிரிழப்பு..!

போதைப்பொருள் பாவனையின் காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் குருநாகல் ஐ சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உயிரிழந்துள்ளதாக. குறித்த இளைஞன் மின்சார விற்பனையில் ஈடுப்பட்டிருந்த போது மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக குறித்த இளைஞனை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்டமையினால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்என மருத்துவ பரீசோதனையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *