வறட்சியினால் எலி காச்சல் பரவும் அபாயம்..!

வரட்சியான கால நிலைகாரணமாக ஏலிக்காச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் கனேவத்த மகுல்வௌ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.

38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்ததாக தெரிவிக்ககப்படுகின்றது.

மேலும், மகுல்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைத்த நீருடன் ஓடும் ஆறுகளுக்கும் , ஓடைகளுக்கும் மக்கள் குளிப்பதற்கு அதிகளவு வருவதால் இவ்வாறான நிலை ஏற்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *