சர்வதேசமும் தீவிரவாதமும்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

பதிலிகள்
இல்லா
பதில்கள்
ஏது?
சாதி
மதம்
மொழி
இனம்
நாடு
என்பது
மனிதம்
தவிர்த்து
தன்
இன மயமாக்கல்
கொள்கையை
மட்டும்
வக்கிரமமாக
வளர்க்கிறது.
சிலது
வளருகிறது
என்பதில்
யாதொரு
பேதம்
இல்லை.
சிலது
பலதை
அழிக்க
வன்மம்
போட்டி
பொறாமை
கலவரம்
கொலை
நச்சு
கருத்துக்கள்
புரட்சி
என்ற
பெயரில்
பல
சமூகங்களுக்கு
நாடுகளுக்கு
மதங்களுக்கு
மொழிகளுக்கு
எதிராக
நித்தம்
வலைபின்னல்
போல்
வளர்க்கப்படுகிறது.
நடு
நிலை
ஊடகங்கள்
ஊடகவியலாளர்கள்
உண்மையை
உரக்க
சொன்னவர்கள்
எல்லாம்
செத்தொழிந்தனர்.
காசுக்கு
கூவும்
ஊடகங்களிடம்
மதம்
மொழி
அரசியல்
பதவி
இனம்
என்று
மண்டியிட்டு
சேவகம்
செய்கிறது.
மனிதம்
வளர்க்க
இங்கு
அன்பை
தவிர
யாதொரு
வஸ்துக்களும்
இல்லை.
அன்பை
கற்று
தர
குடும்பம்
சாதி
மதம்
மொழி
நாடு
சமூகம்
எல்லாம்
மறந்தது.
மறுத்தது.
இந்தியா
பாகிஸ்தான்
நாடுகள்
பூனை
கிளி
போல்
பாம்பு
கீரி
போல்.
ரஷ்யா
அமெரிக்கா
யார்
பெரியவன்?
மதம்
இனம்
மொழி
எது
பெரிது?
யார்
பெரியவன்?
எந்த
நாடு
பாதுகாப்பானது?
போர்
பதட்டம்
கலவரத்தில்
உலகம்
முழுவதும்
பாதுகாப்பு
என்ற
பெயரில்
தீவிரவாதமே!
மனிதம்
உணர்ந்து
திருந்தினால்
திருப்பி
ஒரு
மனிதனை
அனுப்பினால்
வாழ்த்துக்கள்.
பணம்
ஆயுதம்
வேறு
வகையான
சலுகைகளை
பெற்றுக்கொண்டு
அனுப்பினால்
அதற்கு
பெயர்
அதி
தீவிரவாத
அச்சுறுத்தல்.
உலகம்
உய்ய
அறம்
அன்பு
பழகுங்கள்.
தீவிரவாதம்
இருபுறமும்
கூர்
தீட்டிய
கத்தி?
சாதி
மதம்
மொழி
இனம்
நாடு
என்று
அழிந்தது
போதும்.
மனிதா!
மனிதம்
பழக
வா.
இல்லை
உன்
சந்ததி
மண்ணில்
வாசம்
செய்ய
இயலாது.
நாளங்களை
விட்டு
வெளியேற
துடிக்கும்
இரத்தங்கள்
வன்மங்களின்
அச்சுறுத்தலால்!
பெண்களை
பாதுகாக்காத
சமூகம்
இனி
செத்தொழியும். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *