பழங்களின் விலை அதிகரிப்பு…!

பழங்களின் விலைகளில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் , அப்பிள் என்பன அதிக விலையில் உள்ளன.

இந்நிலையில் சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக விளைச்சல் குறைவடைந்தமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் ஒரு கிலோகிராம் புளி வாழை 130 ரூபாவுக்கும், ஏனைய வகை வாழைப்பழங்கள் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *