ரயிலில் மோதி யுவதி மரணம்..!

கைப்பேசி இன்று பலரின் உயிர்களை காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

கைப்பேசியை எடுத்தால் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் கடவையில் பயணித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

22 வயதான குறித்த யுவதி நேற்றிரவு 7.00 மணியளவில் பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து குறித்த ரயிலின் மூலமே குறித்த யுவதி ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் குறித்த யுவதி அங்கு உயிரிழந்த தாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பல தடவைகள் ஹோர்ன் சத்தம் எழுப்ப பட்ட போதும் குறித்த யுவதிக்கு கேட்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *