இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது..!

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ம் திகதி விசாரணைக்கு பின் 28 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இம்ரான் கான் மீது தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதற்கமைய செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடதக்கது.

இதனை எதிர்த்து இம்ரான்கானால் இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதியான அமீர் பாருக் இன்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இதற்கமைய இன்றைய தினம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *