என் கற்பனை காதலி

என் கற்பனை காதலி நீதானடி என் கண்ணில் முழுதும் நீதானடி
உன்னை கண்ட நாள்முதலா என் ஆவி துடிக்குதே ஏனடி

எண்ணங்கள் முழுதும் நீதானடி என் எழுத்தினமும் நீதானடி உன்னில் பிறந்த குழந்தையாய் உன் மடியினில் தவழ ஏங்குதடி

ஒருநாள் ஒருபொழுதும் உன்முகம் மறைவதில்லை ஆதவன் மறைந்தாலும் அழகே நீ என்னில் மறைவதில்லைகுயிலகவும் ஓசை மீதே மாந்தினங்கள் மனமாடும் உன் நாத குழலோசை என் ஜீவன் தூளியாடும்

வண்டுகளின் ரீங்காரம் பூவிதழின் பூபாளம் என் நாத கீதம் உனதங்க செவியோரம்

விரல் கோர்க்க நாதியில்லை வீணை மீட்ட நானில்லை விதிவழியே கடக்கிறேன் வீதியிலே மாய்கிறேன்

வஞ்சியவள் வாசலிலே வாயுரைத்து வாழ்த்து பா இசைக்கிறேன்இச்சென்மம் இணைந்தாட இறைவனவன் இணங்கவில்லை

மறுசென்மம் வாழ்ந்திடவே வரமேதும் வையகத்திலுண்டோ
என் கவியானவளே… ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *