இந்த உலகம் இப்படி தான்..!

பொய்யெல்லாம்
பொய் பேசும் …
மெய்யெல்லாம்
மெய் பேசும் – இது
மெய்யும் பொய்யும்
கலந்த உலகமடா …

பொய்யைச் சொல்லி
புனைந்த கதையில் …
உண்மைகள்
மறைந்திருக்கும் …

உண்மை சொல்வதாய்
நன்மை செய்வதாய்
ஆங்காங்காங்கே
தந்திரங்கள்
நிறைந்திருக்கும் …
அட … அதையும்
காலம் புடைத்தெடுக்கும் …

இங்கே காலமெனும்
மெய்யில் … உடலெனும்
பொய்யில் உயிர்கள்
வாழ்ந்திருக்கும் … இங்கே
எவ்வுயிர்க்கும் ,
எவ்வெவர்க்கும் …
தன் அறிவே , தன்
உணர்வே …கை
கொடுக்கும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *