மரதன் போட்டியில் கலந்துக்கொண்ட மாணவன் உயிரிப்பு..!

மரதன் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலை மெதடிஸ் தமிழ் மஹா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு போட்டியில் மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.இதில் கலந்துக்கொண்ட 16 வயதான ஜெயகுமார் விதுர்ஜன் என்ற மாணவன் மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தி பிறகு அங்கிருந்து அக்கரைபற்று வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்திய சாலை வளாகத்திற்குள் நுளைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 3 மணி நேரம் குறித்த மாணவனை வைத்தியர்கள் கவனிக்கவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *