சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மேற்கொண்டுள்ள பொருளாதார முயற்சிகள் காரணமாக நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல்,மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 8,50, 000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள்,

என எதிர்ப்பார்க்கப்படுகின்றது” இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *