ஆற்றில் குதித்த நபரை  ட்ரோன் மூலம் தேடுதல்..!

மாலையை திருடிய நபர் ஒருவர் அந்த மாலையை ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து மாயமாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது கல்முனை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

பெண் ஒருவரின் தங்க மாலையை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக பொலிஸார் நற்பட்டி முனை பாண்டிருப்பு பகுதிக்கு சென்ற வேலை , பொதுமக்கள் இணைந்து 40 வயதுடைய குறித்த நபரை பிடித்து கொடுப்பதற்காக முற்பட்ட வேளை ,குறித்த நபர் மாலையை ஆற்றில் வீசி தானும் அதில் குதித்து மாயமான நிலையில் பொலிஸார் தேடுதலை தீவிரப்படுத்தினர்.

இதனையடுத்து கடற்படையினரின் ஒத்துளைப்புடன் ட்ரோன் மூலம் குறித்த நபரை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *