பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு..!

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும்,

காலை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதனிடையே, நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்,

இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

வீட்டில் உணவு உட்கொள்ளாமல் வரும் மாணவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாக அமையும் என பலராலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *