பொறியியலாளர்களுக்கு 50 % சம்பளக் குறைப்பை அறிவிக்கிறது பாகிஸ்தானிய விமான நிறுவனம்.

அடுத்த வருடத்திலிருந்து பாகிஸ்தான் இண்டர்னேஷனல் ஏர்லைன்ஸ் தனது பொறியியலாளர்களுக்கான சம்பளத்தையும், உபரிகளையும் 50 விகிதத்தால் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானிய அரசின் முழுவதுமான முதலீட்டில் இயங்கும் பாகிஸ்தான் இண்டர்னேஷனல் ஏர்லைன்ஸ் கடந்த சில வருடங்களாகவே பெரும் நஷ்டங்களை அனுபவித்து வருகிறது. அதனால் நிறுவனத்தின் செலவை அதன் அளவுக்கேற்றபடி மாற்றிக்கொள்ளவே 2021 ஜனவரியிலிருந்து புதிய சம்பளத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *