கொப்பா அமெரிக்காக் கிண்ணத்துக்கான கடைசி மோதலில் பிரேசிலைச் சந்திக்கப் போகிறது ஆர்ஜென்ரீனா.

கொப்பா அமெரிக்காவுக்காக பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களில், யாருக்குப் போகும் கிண்ணம் என்ற கடைசிப் போட்டிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவைச் சந்தித்த ஆர்ஜென்ரீனா வெற்றியடைந்தது.  

கொலம்பியாவும், ஆர்ஜென்ரீனாவும் இதே கிண்ணத்துக்காக இதுவரை விளையாடிய போட்டிகளில் மூன்று தடவைகள் இருவருமே வெல்லமுடியாமல் மோதல் வலைகாப்பவர்களுக்கான போட்டியாகியிருக்கிறது. அந்த மூன்று தடவைகளிலும் ஆர்ஜென்ரீனாவே வெற்றியெடுத்திருக்கிறது. அதே போலவே செவ்வாயன்று நடந்த மோதலிலும் முதல் 90 நிமிட முடிவில் 1 – 1 என்றாகியது. எனவே நேரம் அதிகரிக்கப்பட, அதன் பின்னரும் இரண்டு அணிகளாலும் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத நிலைமையில் அணிகளின் வலைக்காப்பாளர்கள் பனால்டி உதைகளைக் காப்பாற்றி அணியை வெற்றிக்கு அனுப்பவேண்டியிருந்தது.

ஆர்ஜென்ரீனாவுக்காக லுவார்ட்டோ மார்ட்டீனஸும், கொலம்பியாவுக்காக லூயிஸ் டயஸும் 90 நிமிடங்களுக்குள் ஆளுக்கொரு தடவை வலைக்குள் பந்தை அடித்தார்கள். பின்னர் நடந்த பனால்ட்டி உதைகளில் மூன்று தடவைகள் வலைக்குள் பந்து போகாமல் காப்பாற்றிய எமிலியானோ மார்ட்டினஸ் ஆர்ஜென்ரீனாவின் வெற்றியின் கதாநாயகனாகினார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *