தடுப்பூசி ஏற்றியவராயிருப்பினும் “ஒமெக்ரோன்” தொற்றாளர்களை உடனே தனிமைப்படுத்த பிரான்ஸ் உத்தரவு!

உலகை அச்சுறுத்திவரும் ‘ஒமெக்ரோன்’ என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபின் தொற்றுக்கு ஆளாகுவோரையும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களையும் – அவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியிருப்பினும் கூட – உடனடியாகத் தனிமைப்படுத்துமாறு பிரான்ஸின் சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருக்கிறது.

சுகாதார அமைச்சின் இந்த உத்தரவுமருத்துவமனைகளுக்கும் ஏனையசுகாதார நிறுவனங்களுக்கும் கிடைத்திருப்பதாக ஏஎப்பி செய்தி ஒன்றுதெரிவிக்கிறது.பூரணமாகத் தடுப்பூசிகள் இரண்டையும்ஏற்றியவர்கள் தொற்றுக்குள்ளானால்அவர்கள் ஏழு நாட்களுக்குத் தங்களைகட்டாய சுய தனிமைப்படுத்தவேண்டும்என்ற விதிகள் தற்சமயம் பிரான்ஸில் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த சமயத்தில் தடுப்பூசிகளை எதிர்க்கும் வலிமை கொண்டது என நம்பப்படும் “ஒமெக்ரோன்” திரிபின் வருகை மீண்டும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளைப்புதிதாக இறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபிரிக்காவின் தெற்கு நாடுகளில்முதலில் தோன்றியதாக நம்பப்படும்ஆபத்தான பிறழ்வுகளை எடுக்கின்றஉருமாறிய வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ‘ஒமெக்ரோன்’ (Omicron) என்றுபெயர் சூட்டியிருப்பது தெரிந்ததே. இந்தவீரியமான திரிபு தற்சமயம் இங்கிலாந்துஜேர்மனி,பெல்ஜியம், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் இருந்து அண்மையில் திரும்பிய ஒருவருக்குப் புதிய திரிபுதொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக ஜேர்மனியின் சுகாதார அமைச்சு முதலில் தெரிவித்திருந்தது. தற்சமயம் நாட்டின் தெற்கு மாநிலமாகிய பவாறியாவில் மியூனிச்(Munich)நகரில் இருவருக்கு ‘ஒமெக்ரோன்’ தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

🔴நெதர்லாந்தில்… தென் ஆபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்தின் அம்ஸ்ரடாம் ஷிபோல்(Schiphol) விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வந்திறங்கிய பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் 61 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால்அது புதிய “ஒமெக்ரோன்” கிரிமித் தொற்றுத்தானா என்பதை உறுதிப்படுத்தும்வரை அவர்கள் அனைவரும் விமானநிலையத்துக்கு அருகே ஒரு ஹொட்டேலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் அங்கு பெரும் கொத்தணியாக “ஒமெக்ரோன்” திரிபு நுழைந்துவிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நெதர்லாந்து ஏற்கனவே தீவிரமானதொற்றலையை எதிர்கொண்டுள்ளது.அங்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன. உணவகங்கள்வர்த்தக நிலையங்கள் போன்றனமாலை ஐந்து மணியுடன் மூடப்படுகின்றன.

தற்போது கிடைக்கக் கூடிய தடுப்பூசிகளை எல்லாம் எதிர்த்துப்பரவும் வலிமைகொண்ட ‘ஒமெக்ரோன்’ திரிபு, தடுப்பூசியால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று நோயை “மீள் உருவாக்கம்” செய்துவிடலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.