அறை கூவல்

பிரபஞ்சத்தின் அறைகூவல் பிரளயத்திலே இரவா? பகலா?

பஞ்சபூதங்களின் அறைகூவல் பங்கேற்பில் சுத்தமா? அசுத்தமா?

மானிட சமூகத்தின் அறைகூவல் பிறப்பிலே ஆணா? பெண்ணா?

வாழ்வியலின் அறைகூவல் ஆறறிவில் இன்பமா? துன்பமா?

குடும்பத்தின் அறைகூவல் உறவுகளிடையே அன்பா? கருணையா?

மொழிகளின் அறைகூவல் மானுடத்தில் உறவா? பிரிவா?

இலக்கியத்தின் அறைகூவல் இயம்புவதிலே அகமா? புறமா?

தொழில்நுட்பத்தின் அறைகூவல் வாழ்வினில் ஏற்றமா? இறக்கமா?

அமைதிக்கான அறைகூவல் உயிரினங்களிடையே இணக்கமா? பிணக்கமா?

இன்றைய நிலையின் அறைகூவல் இருப்பு நிலையில் வாழ்வா? சாவா?
அறைகூவலின் முடிவு அவரவர் கையில்…..

எழுதுவது ; முனைவர் ந.மணிமேகலை
ந.கந்தம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம்.