உன்னை காணாத போது….

என் காதலியே நான் உன்னை காணாத போது

நான் விடுமுறைக்கு பிறகு
உன்னை காண்பதற்காக
நம் கல்லூரியில் உனக்காக காத்திருந்தேனடி ஆனால்
நீயோ வரவில்லை

உனக்காக நான்காத்திருந்த
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ஒரு யுகம்போல் இருந்ததடி
என் காதலியே

அந்த ஒவ்வொரு நொடியிலும்
நான் கண்கலங்கி நின்றேன்னடி

அப்போது உணர்ந்தேன்
நான் உன் மீது கொண்ட பாசத்தையும் நேசத்தையும்

என் உயிர் கலந்த காதலியே என்றும்
என் அருகில் நீ இருப்பாயாக
உன்னை வேண்டி விரும்பி கேட்கிறேன்
என் உயிர் காதலியே

என் அருகில் நீயும்
உன் அருகில் நானும் நம் அருகில் நம் காதலும்
என்றும் வேண்டுமடி என் காதலியே

உன் நினைப்பில் என்றும்
நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் காதலியே

இப்படிக்கு
வ.ஜுவஸ்ரீ
இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கரூர் 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *