மின்சாரசபை பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்

இன்று ஜூன்மாதம் 8ம்திகதி நள்ளிரவு முதல் சிறீலங்கா பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டம் திருத்தப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு என குறித்த சங்கம் குறிப்பிடுகிறது.


குறித்த சட்டத்திருத்தம் விதிமுறைகளுக்கு மாறாகவும் பாதகமாகவும் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் குறிப்பிடுகிறார்.


நாடளாவிய ரீதியான இந்தவகை பணிப்புறக்கணிப்பு , 1996ஆம் ஆண்டுக்கு பின்னர்  முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

செய்திகள் எழுதுவது : யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *