நாடாளுமன்ற உறுப்பினர் ஜோண்சன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தன்னைக் கைது செய்வதை தடுப்பதற்கான உத்தரவை கொண்டுவர ஜோண்சன் பெர்னாண்டோ மேல்நிதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்திருக்கின்றார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை சந்தேக நபராகப் குறிப்பிட்டு இந்த கைதுக்கான கோரிக்கையை விடுத்துள்ளார்கள் என்றும், இது சட்டவரைமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் தம்மை கைது செய்வதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டியதாக மேல் நீதிமன்றில் கேட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

செய்திகள் எழுதுவது: யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *