போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது. இதனிடையே நேற்று பல அமைப்புகள் போராட்ட காரர்கள் மீதான அரசின் அடக்கு முறைகளுக்காக தமது கண்டனத்தை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது மக்களை பெரிதும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக அமைகிறது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *