இரண்டு ஹெலிகொப்டர்கள் வானத்தில் மோதிக்கொண்டதால் ஆஸ்ரேலியாவில் நால்வர் மரணம்.

ஆஸ்ரேலியாவின் குவீன்ஸ்லாண்ட் பிராந்தியத்திலிருக்கும் குடும்பக் கேளிக்கை மையத்தின் [Sea World] மேலே பறந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டன. விபத்தில் நால்வர் இறந்ததாகவும் ஒரு ஹெலிகொப்டர் அதன் பின்னர் கீழே இறங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கீழே இறங்கிய ஹெலிகொப்டர் மீது Sea World மையத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.  மேலும் மூவர் மோசமாகக் காயமடைந்தார்கள்.

கோடைகால விடுமுறை நிலவும் ஆஸ்ரேலியாவில் பிற்பகலில் இச்சம்பவம் நடந்தபோது குடும்பங்களாகப் பலர் அந்தக் கேளிக்கை மையத்திலிருந்தனர். சம்பவம் நடந்த இடத்திலேயே 13 பேருக்கு மருத்துவ உதவி செய்ததாக அங்கே உடனடியாக விரைந்த அவசர சேவைப் பணியினர் தெரிவித்தனர். விபத்தின் காரணம் பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *