கதிரவனார் கண்சிமிட்டும் தைத்திருநாள்

“அன்பெனும் வழிதனில்
அறந்தனை விதைத்து
ஆனந்தப் பேறுகள்
ஆயிரம் துய்த்து
இன்பச் சுனைகளில்
இதயங்கள் நனைத்து
ஈகங்கள் இயற்றிய
ஈழத்தை நினைத்து
உண்மையின் வழிதனில்
உயிர்களை விதைத்து
ஊற்றெனச் சுரந்திடும்
ஊக்கங்கள் பெருக்கி
எண்ணத்தில் மேவிய
எழுவழி காட்டி
ஏறிடும் படிகளில்
ஏற்றங்கள் நிறைத்து
ஐயம் தெளிவித்து
ஐக்கியம் காத்து
‘ஒளியோன்’ சுடரினில்
ஒளிகொண்டு ஏற்றி
ஓடிடும் காலங்கள்
ஓய்ந்திட முன்னமே
ஔவியம் விலக்கி
ஔடதம் போக்கி
எஃகெனச் செதுக்கி
அஃதென வாழ்வை”
அவனியில் வலம்வரும்
‘அத்தனை தமிழரும்’
தலை நிமிர்வோடு
தரணியில் வாழ்க!”

“ஏரேற்றி உழுதமண்ணில்
எடுப்பாக வயலிருக்க
நீரேற்றும் வரப்புகளில்
நெல்மணிகள் விழைந்திருக்க
காரேற்றும் மேகமிடை
கதிரவனார் கண்சிமிட்டப்
பாரேற்ற உணவளிக்கும்….
உழவுதனைப் போற்றிடுவோம்”

அன்புறவுகள் அனைவருக்கும்…
”இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்”

எழுதுவது : காந்தள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *