பொங்கலோ பொங்கல்

வேண்டா தீயவை
வேகட்டும்
வேண்டிய நல்லன
சேரட்டும்…

தாழ்வுகள் எல்லாம்
இல்லாமல்
உயர் மேடாய்..,
செழிகட்டும்…

இனிப்பு செய்திகள்
எந்நாளும்
செவிக ளிரண்டை
நிரப்பட்டும்…

இல்லம் முழுக்க வளம்
சுரந்து
ஈகை குணம்
மேலோங்கட்டும்…

கலைகள் எங்கும்
காத்திடுவோம்
கலைஞர்கள் வாழ்வில்
ஒளி ஏற்றிடுவோம்…

இயற்கை நலன்களில்
இணைத்துக்கொண்டு
செயற்கை உணவை
மூட்டைக் கட்டிடுவோம்..

நெகிழி பைகள் பூமியை
மலடாக்கும்
நெசவுத் தொழிலுக்கு
கரம் கொடுப்போம்…

இன்பம் துன்பம் எது
வரினும்
இனிதென கடக்க
கற்றிடுவோம்…

அன்பை மட்டும்
அழுக்கின்றி
பொருளுகேற்ப
பகிர்ந்திடுவோம்…

புரிதல் என்னும் கயிறை
கொண்டு
அகிலம் முழுக்க வலம்
வருவோம்….!!!

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்…

எழுதுவது : வெண்பா .இரா.பாக்கியலட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *