பேஷாவர் குண்டு வெடிப்பின் பின்னாலிருந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திங்களன்று பாகிஸ்தான், பேஷாவர் நகரின் பொலீசார் வாழும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசலில் வெடித்த குண்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. காயப்பட்டுச் சிகிச்சைக்கு உள்ளாகியிருப்போர் எண்ணிக்கை 225 ஆகும். அக்குண்டு வைப்புக்குக் காரணமானவர்கள் சிலரைக் கைது செய்திருப்பதாக நகரின் பொலீஸ் அதிபர் தெரிவித்தார்.

குண்டு வெடிப்புக்குத் தாமே காரணம் என்று பாகிஸ்தான் தலிபான்கள் பொறுப்பெடுத்தார்கள். பின்னர் அது அவர்களால் மறுக்கப்பட்டது. ஆயினும் அந்த இயக்கத்தினரே பொறுப்பானவர்கள் என்று பாகிஸ்தான் அரசு கருதுகிறது. குண்டு வெடித்த பிராந்தியத்துக்குள் நுழைவதற்கு உள்ளேயிருந்தவர்களின் உதவியின்றி எவராலும் முடியாது என்று குறிப்பிட்ட பேஷாவர் பொலீஸ் உள்ளிருந்து உதவியவர் யாரென்று தேடிவருவதாகக் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *