தந்தையும் மகளும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை..!

வெளி நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள மனைவி அங்கு வேறொருவருடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என மன வேதனையடைந்து தன்னுடைய 6 வயது மகளுடன் தந்தை ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜ எல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் திருக்கோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதத்திலேயே இவர்கள் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.குறித்த நபர்கள் கந்தளாயை சேரந்த 38வயதுடையவரும் அவரது மகள் 6 வயதுடையவர்களும் ஆவர்.

சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *