உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவன் தற்கொலை…!

அண்மையில் உயர்தரபரீட்சையின் பேறுபேறுகள் வெளியாகியிருந்தது .இந்நிலையில் உயர்தரப்பரீட்சையில் ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடைந்தமையால் மன விரக்தியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ் பேசாலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இவர் விஞ்ஞான பிரிவில் கற்று தோற்றியவர் ஆவார்.

கடந்த புதன்கிழமை தாயும் சகோதரியும் கோவிலுக்கு சென்ற பின். மகன் வீட்டுக்குள் இருக்க, தந்தை வீட்டுக்கு வெளியே இருந்துள்ளார்.

அந்நேரம் மகனை தந்தை அழைத்தபோது அவர் தந்தைக்கு பதிலளித்துள்ளார்.

பின் சிறிது நேரம் கழித்து தந்தை முட்டை பொரிப்பதற்காக சமையல் அறைக்குள் சென்று மீண்டும் மகனை அழைத்தபோது பதில் கிடைக்கவில்லை.

அதன் பின்னரே தந்தை அறைக்குள் எட்டிப் பார்த்தபோது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

பின் அயலவர்கள் உறவினர் , இணைந்து மகனின் சுருக்குக் கயிற்றை அறுத்து, மகனை மீட்டுள்ளனர்.

உடனே, அவரை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.எனினும் ஒரு மணித்தியாலமாக வாகனமின்றி இருந்துள்ளனர்.

அதன் பின்னரே வைத்தியசாலைக்கு மகனை கொண்டு சென்றுள்ளனர். அவ்வேளை குறித்த மாணவன் இறந்துவிட்டார் என மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

இச்சம்பவம. தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *