இப்படியும் மனிதர்கள்..!
சுதந்திர கொடிகள்…
ஈரமில்லா பேனாக்கள் இருந்தென்ன பயன் இம்மியளவும் கசிய மனமில்லா மனிதங்கள் வாழ்ந்தென்ன பயன்
கோட்டையிலே கோடிரூவாய் கம்பளம் விரிப்பு தெருக்கோடியிலே குமரிகளின் உடையவிழ்ப்பு
கொம்பிலே கொடியேற்றி கூச்சலிடுவான் குடிசைகளை தீயிட்டு கொளுத்திடுவான்
சாதியால் மதத்தால் பூசல் செய்திடுவான்…வலியவனுக்கு சாமரம் வீசுவான் வறியவனை வெட்டி வீசுவான்…
வழிந்தோடும் குருதியை கண்டும்கூட ஈரமில்லா பேனாக்களும் இரக்கமில்லா மனிதங்களும் வாழ்ந்தென்ன பயன்….
ப.கல்யாணசுந்தரம்
15/08/2023